மழை பற்றி ஓர் அலசல் !*
*மழை பற்றி ஓர் அலசல் !* *தமிழில், 14 வகையான மழை உண்டு!* 1. மழை 2. மாரி 3. தூறல் 4. சாரல் 5. ஆலி 6. சோனை 7. பெயல் 8. புயல் 9. அடை (மழை) 10. கன (மழை) 11. ஆலங்கட்டி 12. ஆழிமழை 13. துளிமழை 14. வருள்மழை வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு! இயற்கை நுனித்த தமிழ்! ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! ☆ அடைத்த மழை ☆ அடைக்கின்ற மழை ☆ அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு! மழ = தமிழில் உரிச்சொல்! ☆ மழ களிறு= இளமையான களிறு ☆ மழவர் = இளைஞர்கள் அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே.. மழை எனும் சொல்! மழ + ஐ இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்! மழை வேறு/ மாரி வேறு! அறிக தமிழ் நுட்பம்! இயற்கை! மழை/மாரி ஒன்றா? ☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல! ☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல! மார்+இ= மாரி! தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்! அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், ...